இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அக்.6 நடைபெற உள்ள சாகச நிகழ்ச்சியின் கடைசி கட்ட ஒத்திகையை நேரில் பார்ப்பதற்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் திரளாக கூடியிருந்தனர். அப்போது நடைபெற்ற சூரியகிரண் குழுவினரின் வான் சாகசம் பெரிதும் கவர்ந்தது.