முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உருவாக்க வேண்டும், 480 நாட்கள் பணி புரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (மே 24) பிரச்சாரம் மேற்கொண்ட சிஐடியு சென்னை மண்டலக் குழுவிற்கு, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து, தகவல்தொழில்நுட்பம், மருத்துவமனை, ஆட்டோ தொழிலாளர்கள் வரவேற்பு அளித்தனர்.