உத்திரமேரூர்,செப்.21- சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில், 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற உத்திரமேரூர் காவலருக்கு பாராட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. உத்திரமேரூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றுபவர் தமிழன்பன் (30). இவர், சென்னையில் நடந்த, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார். இந்த, போட்டியில் கலந்து கொண்ட முதல் நிலைக் காவலர் தமிழன்பன் 300 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்நிலையில், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவல் நிலைய காவலர்கள் அனைவரும் வெண்கலம் பதக்கம் வென்ற முதல் நிலை காவலர் தமிழன்பனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.