கடலூர்,ஜூலை 31-
கடலூர் சில்வர் பீச், கொண்டங்கி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் குடியிருப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மூத்த தலை வர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், புருஷோத்தமன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டுகளில் குடியிருப்போர் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் விரிவாக எடுத்துரைத்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் சுகுமாரன் சமர்ப்பித்தார்.
நிர்வாகிகள்
கூட்டமைப்பின் செயல் தலைவராக எம்.மருதவாணன், தலைவராக பாலு பச்சையப்பன், பொதுச் செயலாளராக பி.வெங்கடேசன் ,இணைப் பொதுச்செயலாளர் எஸ்.கே.தேவநாதன், பொருளாளராக வெங்கட்ரமணி ஆகி யோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கொண்டங்கி ஏரி, கேப்பர் மலை மற்றும் சில்வர் பீச் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.