districts

img

மினி பேருந்துகளை இயக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதி 41ஆவது வார்டுக்குட்பட்ட எழில் நகர் பகுதியில் மேம்பால பணி நடைபெறுவதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சுண்ணாம்பு கால்வாய் முதல் டோல்கேட் வரையும், சுண்ணாம்பு கால்வாய் முதல் வள்ளலார் நகர் வரை மினி பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிறன்று (மார்ச் 26) நடைபெற்றது.  பகுதி செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், விஜயகுமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, விஜி, கோவிந்தன், மாமன்ற உறுப்பினர் விமலா ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.