districts

img

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

சென்னை, டிச. 1 - பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழனன்று (நவ.30) தென்சென்னையில் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் செயல்படும் 100க்கும் மேற்பட்ட தலித் உரிமை களுக்கான அமைப்புகள் இணைந்து பட்டியலின மக்களுக்கான கோரிக்கை சாசனத்தை உரு வாக்கி உள்ளன. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி டிச.4 அன்று டெல்லியில் பேரணியை நடத்துகின்றன. இந்த கோரிக்கை களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விருகம்பாக்கம் பகுதி சத்யா நகர், எம்ஜிஆர் நகர் மார்க்கெட், கோயம் பேடு மார்க்கெட் பகுதி களில் நடைபெற்றது. இதில், முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், கட்டு மான சங்க தலைவர் ஆறு முகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் மணி மாறன், சுமைப்பணி தொழி லாளர் சங்க தலைவர் ம.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.சி.ராஜா விடுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று போக்குவரத்து அரங்கம் உள்ளிட்ட அமைப்புகள்  சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.