கடலூர், ஜன.17- நெல்லிக்குப்பம் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க முன்னணி தோழர் சகுந்தலா அம்மையார் வெள்ளிக்கிழமை (ஜன.17) காலமானார். நெல்லிக்குப்பம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சகுந்தலாவின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பராயன், பகுதிச் செயலாளர் ஸ்டீபன் ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெய பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தென்னரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த சகுந்தலா, சிபிஎம் நெல்லிக்குப்பம் முன்னாள் நகர செயலாளர் ஆர்.வி.சுப்ரமணியனின் மாமியார். மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வி.எஸ். சந்திராவின் அம்மா.