சென்னை, மார்ச் 15 - பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஃபோர்மேன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தாம்பரம் கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் ஃபோர்மேனாக இருப்பவர் ரமேஷ் பாபு (வயது 48). இவர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக பெண் ஊழியர்கள் மார்ச் 1 அன்று தாம்பரம் செயற்பொறி யாளர் சாந்தியிடம் புகார் அளித்தனர். அதன்மீது நடவடிக்கை எடுக்காததால் மார்ச் 8 அன்று சென்னை தெற்கு திட்டம்-2ன் மேற்பார்வை பொறியா ளர் சுகுமாரிடம் புகார் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மேற் பார்வை பொறியாளர் குற்றவாளிக்கு சாதகமாகவும், ஊழியர்களை உதா சினப்படுத்தியும் பேசினார். இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர் ரமேஷ்பாபுவை பணியிட மாற்றம் செய்து விசாரணை நடத்த வலியுறுத்தி செவ்வாயன்று (மார்ச் 15) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பேசிய தலைவர்கள், 10 ஊழியர்கள் பணியாற்றினாலே அங்கு பாலியல் புகார் குழு அமைக்க வேண்டும். ஆனால் இனிமேல்தான் புகார் குழுவே அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவது கேலிக்குரியதாக உள்ளது என்றனர்.
ஊழியர்கள் மீது தீவிரமான புகார்கள் எழும்போது சம்பந்தப்பட்ட நபரை தற்காலிக பணி நீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்த பிறகே விசா ரணை நடைபெறும். இதற்கு மாறாக, மேற்பார்வை பொறியாளர் நடந்து கொண்டதால் அவரது அலுவல கத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனை யடுத்து, ஃபோர்மேன் ரமேஷ் பாபுவை தற்காலிக பணி நீக்கம் செய்ததற்கான நகலை சங்கத் தலைவர்களிடம் மேற்பார்வை பொறியாளர் வழங்கி னார். இந்தப்போராட்டத்தில் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, மண்டலச் செயலாளர் முருகானந்தம், தெற்கு-1ன் செயலாளர் பண்டாரம் பிள்ளை, தெற்கு-2ன் செயலாளர் அன்பழகன், மகளிர் நிர்வாகிகள் சாலட், விஜயலட்சுமி, ஹெலனா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலா ளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.