districts

img

மாதர் சங்க போராட்டத்தால் பாலியல் குற்றவாளி கைது

சென்னை, ஜன. 4 - மாதர் சங்க போராட்டத்தை அடுத்து  பாலியல் குற்றவாளியை காவல்துறை யினர் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை சின்ன மலை நீதிமன்றம் எதிரே வெங்கடாபுரம் குடிசை பகுதியில் வசிப்பவர் ரோஜா. பூ வியாபாரியான இருக்கு 30 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய புனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். அதே தெருவில் எதிர்புறத்தில் 55 வயதுடைய சாந்தா (எ) அப்பாஸ் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ரோஜா  பூ வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் ரோஜா வீட்டின் மின் சாரத்தை துண்டித்த சாந்தா, புனி தாவை அடித்து துன்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை யறிந்த ரோஜா, கிண்டி அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு ஒப்புகைச் சீட்டை (சிஎஸ்ஆர்) கொடுத்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யப்பட வில்லை. அதே நேரத்தில், பாதிக்கப் பட்ட பெண்ணை  சட்டவிரோதமாக காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்  சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க த்தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.சரஸ்வதி ஆகியோர் திங்களன்று (ஜன. 3) காவல் நிலையத்திற்கு சென்று  புகார் குறித்து விசாரித்தனர். அப்போது ஆய்வாளர் பொற் கொடி, உதவி ஆணையர் புகழ்வேந் தன் ஆகியோர், குற்றவாளி சிஎஸ்ஆர் மீது நீதிமன்ற வழிகாட்டுதலை பெற்றுள் ளனர். எனவே, முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதியவில்லை. எப்ஐஆர் பதிய ஒரு வாரம் ஆகும் என்று கூறி யுள்ளார். இதையடுத்து எப்ஐஆர் பதியா விட்டால் வெளியேற மாட்டோம் என்று  கூறி காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடு பட்டனர். இதையடுத்து இரவு 10 மணியள வில் டிச. 30ஆம் தேதி பதியப்பட்ட எப்ஐஆர் நகலை கொடுத்துள்ளனர். குற்றவாளியை விரைந்து கைது செய்வ தாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து குற்ற வாளி சாந்தாவை காவல்துறையினர் செவ்வாயன்று (ஜன. 4) கைது செய்த னர்.