districts

தையல் தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்ட பேரவை

சென்னை, மே 31 - சென்னை மற்றும் புற நகர் தையல் தொழிலாளர் கள் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட 2ஆவது  ஆண்டு பேரவை ஞாயிறன்று (மே 29) சிந்தாதரிப் பேட்டையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.டி.ராஜேந்திரன் பேரவைக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கே.எஸ். ஜீவானந்தம் வரவேற்றார். துணை தலைவர் ஆ.விஜயா அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். சம்மே ளன துணைத் தலைவர் பி.கோவிந்தசாமி பேர வையை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கை மாவட்டச் செயலாளர் பி.சுந்தரமும், வரவு,செலவு அறிக்கையை  பொருளாளர் எம். ஆனந்தனும் சமர்ப்பித்த னர். விழுப்புரம் மாவட்ட தையல் சங்க மாவட்டச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் எஸ்.சந்தானம் நிறைவு ரையாற்றினார். நிர்வாகி பிரகாஷ் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக எஸ்.டி.ராஜேந்திரன், செயலாளராக பி.சுந்தரம், பொருளாளராக கே.எஸ்.ஜீவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.