districts

img

மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு சாலையில் தேங்கும் கழிவு நீர்

விழுப்புரம், மே 24-

    மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சி யில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாய கர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரே கழிவு நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலும், அந்த சாலை யில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளா கிறார்கள். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.