districts

img

சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

மரக்காணம், மே 31- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த பகுதி விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாததால், கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசு கிறது. மேலும் இதிலிருந்து கொசு உற்பத்தியாவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வை யிட்டு உடனடியாக முறையான கழிவு நீர் கால்வாய் அமைத்து சலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;