அம்பத்தூர் கொரட்டூர் வடக்கு டி.வி.எஸ். நகர் விரிவாக்கம் முதல் குறுக்கு சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?