districts

img

மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திடுக மாதவரம் - செங்குன்றம் மாநாடு வலியுறுத்தல்

சென்னை, அக். 20- சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழ கம் அமைக்க வேண்டும் என சிபிஎம் மாதவரம் - செங்குன்றம் பகுதி மாநாடு வலி யுறுத்தியுள்ளது. மாதவரம் - செங்குன்றம் பகுதி 16ஆவது மாநாடு மாதவரத்தில் ஞாயிறன்று (அக். 20) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் மா.பொ.சு.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் பி.மைதிலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.கே.சண்முகம் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் ஏ.தமிழ்ச்செல்வி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். முன்னதாக எஸ்.முருகன் வரவேற்றார். அகஸ்டின் நன்றி கூறினார். தீர்மானங்கள் மாதவரம்-செங்குன்றம் சாலையில் உள்ள வாத்தியார் தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க  வேண்டும், விநாயகபுரம், லட்சுமிபுரம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, தூர்வாரி நீர் நிலைகளை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 32ஆவது வட்டத்தில் உள்ள நீர்நிலை கால்வாயை மாசுபடுத்தும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பகுதிக்குழுதேர்வு 9 பேர் கொண்ட பகுதி குழு செயலாளராக வி.கமல நாதன் தேர்வு செய்யப்பட்டார்.