பூந்தமல்லி,ஜூலை 5-
அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்க ளிப்புடன் அமைக்கப்படும் என 2023 -24 ஆம் ஆண்டுக் கான செய்தித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப் பட்டது.
அதனை செயல்படுத்தும் விதமாக இடம் தேர்வு செய்யும் பொருட்டு வெள்ளியன்று (ஆக-4), திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் குத்தம்பாக்கம் ஊராட்சி பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு அனாதினம் நிலம் 100 ஏக்கர் உள்ளது. இந்த அரசு நிலத்தில் மினி ஓலிம்பியாட் விளையாட்டு மைதானம் அமைக்க ஏதுவாக இருக்குமா எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் செயலாளர் முனைவர் எம். எஸ்.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செய லாளர் இரா .செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த. மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் இந்த ஆய்வின் போது உடனி ருந்தனர்.