districts

img

சேந்தநாடு பகுதியில் வாழைச்சந்தை அமைத்திடுக

கள்ளக்குறிச்சி, அக்.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர்  கிழக்கு ஒன்றிய 11-  வது ஒன்றிய மாநாடு சேந்தநாட்டில் நடைபெற்றது. செங்கொடியை மூத்த தோழர் டி.வெங்கடேசன் ஏற்றி வைத்தார். கே.வேல்முருகன் வரவேற்றார். எம்.வி. ஏழுமலை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், இ.அலமேலு, மாவட்டக் குழு உறுப்பினர் எ.சக்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன் நிறைவுறையாற்றினார். ஒன்றியக்குழு தேர்வு 15 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு செயலாளராக ஜெ.ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானம் விஜயகுப்பம், மாரனோடை கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். திருநாவலூர் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த திருடு போன 1790 சவரன் நகைகள் இன்றைய மதிப்பில் நகையை இழந்தவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். சேந்த நாடு பகுதியில் வார சந்தையை அமைக்க வேண்டும். சேந்த நாடு,சேந்தமங்கலம் இரண்டு கிராமங்களையும் தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்.  சேந்தநாடு பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு முந்திரி ஆராய்ச்சி ஆலை மற்றும் தொழிற்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்  உள்ளிட்ட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.