districts

img

புதுப்பட்டினத்தில் 500 படுக்கை கொண்ட அரசு மருத்துவமனை அமைத்திடுக!

 கல்பாக்கம், அக்.3-  திருக்கழுக்குன்றம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை புதுப்பட்டினத்தில் 500 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை அமைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்ட 11வது மாநாடு வலியுறுத்தியுள்ளது. புதனன்று (அக்.2) புதுப்பட்டினத்தில் மாநாடு  பி.கே.ரபீக், டி விஜயகாந்த், பி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் கொடியை மூத்த தலைவர் கே.பழனிசாமி ஏற்றி வைத்தார், வட்டக் குழு உறுப்பினர் என்.சுந்தர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.செல்வகுமார் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரி கிருஷ்ணன் பேசினார். வட்ட குழு செயலாளர் எம்.குமார் வேலை அறிக்கையும் பி.ராமமூர்த்தி வரவு,செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கலைச்செல்வி, எம்.செல்வம் ஆகியோர் பேசினர்.  தீர்மானங்களை வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.முரளி எம்.மோகனப்பிரியா ஆகியோர் முன்மொழிந்தனர். மாநாட்டை நிறைவு செய்து சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதிஅண்ணா பேசினார். தீர்மானங்கள்  திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும், மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் நகரிய பகுதியில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியை வழங்க வேண்டும், கல்பாக்கம் முதல் கேளம்பாக்கம் மற்றும் கோவளம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் அரசின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  வட்டக் குழு தேர்வு 7 பேர் கொண்ட திருக்கழுக்குன்றம் வட்டக்குழுவின் செயலாளராக பி.கே.ரபீக் தேர்வு செய்யப்பட்டார்.