சென்னை, மார்ச் 19- பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தலைவரும் (ஏயுடி) ஆசிரியர் சமூகத்தின் ஒப்பற்றவருமான பேராசிரி யர் என்.செந்தாமரை சென்னையில் வியாழக் கிழமை (மார்ச் 17) கால மானார். அவருக்கு வயது 75. 1973 ஆம் ஆண்டு ஈரோடு சிக்க நாயக்கன் கல்லூரியின் வணிகவியல் துறையில் விரிவுரை யாளராக பணியில் சேர்ந்த அவர் 2006 ஆம் ஆண்டு துறைத்தலைவராக இருந்தபோது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அந்த கல்லூரி அரசுக் கல்லூரியாக மாறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த வர் அவர் என்று ஆசிரியர் சங்கத்தலைவர்கள் கூறினர். அனைத்து தொழிற்சங்க தலைவர்களுடன் நெருக்க மான தொடர்பை கொண்டி ருந்த அவர், கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் ஆட்சி பேரவைக்குழு உறுப்பினரா கவும் செயல்பட்டுள்ளார். பல்கலை கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் தெரிவுக்குழுவின் உறுப்பினராக சிலமுறை இருந்துள்ளார். சுயநிதி கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் வரன்முறை செய்யப்படு வதற்கு பாடுபட்டவர்களில் ஒருவரான செந்தாமரை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தியவர்களில் ஒருவர்.பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்க ளுக்கு உரிய சம்பளம் கிடைக்க பாடுபட்டவர். 1991 ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்துவ கல்லூரியிலும் 2005 ஆம் ஆண்டு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியிலும் ஆசிரியர் பிரச்சனை ஏற்பட்டபோது அதை சுமூகமாக முடிக்க காரணமாக இருந்தவர். 1946 ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் 75வது ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தார் என்று பச்சையப்பன் கல்லூரியின் உயிரியல் துறை பேராசிரி யர் சேது கூறினார். பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். “ஆசிரியர் சமுகத்தின் பிதாம கனாக திகழ்ந்தவர் செந்தா மரை’’ என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் புகழஞ்சலி செலுத்தி யுள்ளது. அவரது காலத்தில் தான் சங்கத்திற்கு நுங்கம் பாக்கத்தில் சொந்தகட்டிடம் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.