districts

img

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர் துணைக் குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் துணைக் குழு ஒருங்கிணைப்பாளர் க.வெண்ணிலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி மு.ரம்யாஅசோக் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் உ.சுமதி, மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் அ.கோதை முருகன், மாவட்ட தலைவர் க.திவ்யா, மாவட்ட செயலாளர் இரா.பாண்டுரங்கன், வட்ட பொருளாளர் வி.சுகன்யா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் பேசினர்.