வி.பி .சிந்தன் வாசகர் வட்டம் சார்பில் “கனவு தேசமும் களவு போகும் சுதந்திரமும்”என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (மே28) நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டம் பாரிமுனையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் செ.சிவசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ச.சிவக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் செ.சிவசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய தலைவர் சுபாஷினி அலி கருத்துரையாற்றினார். தமுஎகச மாநில துணைத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.