கள்ளக்குறிச்சி, ஜன.31- கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனா சூர்கோட்டையில் லெனின் 100 வது நினைவு தின கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது ‘லெனின் வாழ்க்கை வரலாறு, புரட்சிக்கான பாதைகள் குறித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கருத்துரையாற்றினார். இந்த நிகழ்வில் தேர்தல் நிதி வழங்கினர். மாவட்டச் செயலாளர் டி. எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, ஒன்றிய செய லாளர் வி.ரகுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.