districts

செயல் அலுவலர் பதவிக்கான சென்னையில் இன்று நடைபெறுகிறது

சென்னை,ஏப்.23-  குரூப் 7ஏவில் அடங்கிய செயல் அலுவலர் பதவியில்  காலியாக 4 இடங்களுக்கான தேர்வை 986 பேர் எழுதுகின்ற னர். சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் இந்த தேர்வு நடை பெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 7ஏ  வில் செயல் அலுவலர் (கிரேடு 1) பதவியில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு 986  பட்டதாரிகள் விண்ணப்பித்த னர். இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு கடந்த 2 நாட்கள் நடக்கிறது. சனிக்கிழமையன்று  காலை 9.30 மணி முதல் 12.30 மணி  வரை முதல் தாள் தேர்வு ( தமிழ் தகுதி தேர்வு) நடக்கி றது. பிற்பகல் 2.30 மணி  முதல் 5.30 மணி வரை  இரண்டாம் தாள் தேர்வு (பாடத்தேர்வு), 24ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முன்றாம் தாள் தேர்வு (சட்டம்) தேர்வும்  நடக்கிறது. சென்னையில் மட்டும் 4 இடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. அதாவது சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் சிவகாசி இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வியாசர்பாடி விஓசி வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த தேர்வு நடக்கிறது.

;