சென்னை, டிச. 13 - அஸ்தினாபுரம் சீத்தாராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் தெருக்க ளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் சொல்லொ ண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். தாம்பரம் மாநகராட்சி, அஸ்தினாபுரம், ஜெயின் நகர் விரிவாக்கம், சீத்தாராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீர் பாதாள சாக்கடையில் விடப்படுகிறது. பாதாள சாக்கடை குழா யின் அளவு சிறியதாக இருப்பதால், நீரின் அழுத்தம் தாங்காமல் கழிவு நீரும் வெள்ள மும் சேர்ந்து பாதாள சாக்கடை மூடி வழி யாக வெளியேறி தெருக்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, சுமார் அரை அடி அள விற்கு நிற்கும் கழிவுநீரால், மக்கள் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் துர்நாற்றத்தால் குடியிருப்புவாசிகள் ஒவ்வாமைக்கு ஆளாகியுள்ளனர். இத னால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் ஆழ்துளை கிணறுகளில் இறங்கி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்யும்போது, சாக்கடை நீருடன் சேர்ந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. முதியோர், உடல் நலம் குன்றியோர் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தெருக்களில் தேங்கியுள்ள கழிவு நீரை லாரிகள் மூலம் வெளியேற்றுவதோடு, பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.