மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன.30 அன்று எம்ஜிஆர் நகரில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி குழந்தைகளின் ஊர்வலம் மற்றும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி தலைவர் அ.ஜானகிதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் அ.மணிமாறன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மா.சித்ரகலா, பகுதிச் செயலாளர் தீ.விஜயகுமாரி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஆனந்த்குமார், பகுதி ஒருங்கிணைப்பாளர் கா.சதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.