districts

img

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - பள்ளிகல்வித்துறை

மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விடப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவெடுக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 

விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.