ராணிப்பேட்டை,அக்.30- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பழங்குடி பட்டியலின மக்களின் வாழ்வுரிமை கோரிக்கை கருத்தரங்கம் ஆற்காடு தாலுகா செய லாளர் எஸ். செல்வம் தலை மையில் காவனூர் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது. மாவட்ட அமைப்பாளர் என். காசி நாதன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. சந்திரன், கே. சேகர் ஆகியோர் உரை யாற்றினர். ஆணைமல்லூர் ஊராட்சியில் பழங்குடி மக்க ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு மாவட்டம் முழுவதும் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். பூம்பூம் மாட்டுக்காரர், குருவிக் காரர், காட்டுநாயக்கன் மக்க ளுக்கு சாதி சான்று வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.