districts

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

வேலூர், ஆக.18-

     வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளை பார்வையிட்டார். புகார் மனு அளிக்க வருபவர்கள், காவல் நிலைய வர வேற்பாளர்கள் கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார்.  

     பின்னர், மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து கேட்ட றிந்தார். அதன் மீதான உடனடி விசாரணை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.