சிதம்பரம், ஜன. 5- சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட சத்யா நகர், வேங்கான் சந்து, தில்லை அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முன்னாள் திமுக நகர செயலாளர் சாரங்கன் மற்றும் திமுக வார்டு செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சத்யா நகர், வேங்கான் சந்து, தில்லை யம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதி களில் கடந்த 40 வருட காலமாக வசித்து வருவதாகவும் அவர்கள் வசிக்கும் பகுதி குரு நமச்சிவாய மடத்திற்கு உரியது என்றும் இந்த இடத்தை இந்து அறநிலைய துறையினர் குடி யிருப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர் என காலி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த இடம் கடந்த 40 ஆண்டு களுக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. அதை சுத்தம் செய்து அப்போது இருந்த குரு நமச்சிவாய மடத்தின் அறங்காவலர் அனுமதி பெற்று குடி யிருந்து வருவதாகவும் இதற்காக மாத தர வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது. இவர் இறப்பிற்கு பிறகு வழங்கவில்லை. எனவே இந்த இடம் கோவிலுக்கு இடையூறாக இல்லை நீர்வழி ஆக்கிரமிப்பிலும் இல்லை. இந்த நிலையில் இந்து அறநிலைய துறை இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக குடியிருப்பவர்கள் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் எனவே அரசு குடி யிருக்கும் இடத்திற்கு தரை வாடகை பெற்றுக்கொண்டு குடியிருப்பை காலி செய்யாமல் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.