கடலூர், செப்.6- நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்திய ஞான சபையின் 34 ஏக்கர் நிலம் யார் பெயரில் உள்ளது என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ள லார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபையை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த னர். இதில் சத்தியஞானசபை, தர்மசாலை உள்ளிட்டவை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு இப்பகுதியில் நூறு கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கூடாது, ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டு இதில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், செப். 12 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் 34 ஏக்கர் நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளது என்ற விவ ரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (செப்.6) வருவாய்த்துறையினர் 5 குழுக்கள் பிரிந்து அந்த 34 ஏக்கர் நிலப் பரப்பில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ள நிலையில் இந்த கட்டிடங்கள் எப்பொழுது வாங்கப்பட்டது. தற்போது இது யார் பெயரில் உள்ளது என கேள்வி எழுப்பினர்.