districts

மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் மாமல்லபுரம் அருகே பிப்.19 ஏவப்படுகிறது

சென்னை, பிப்.15 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் வரும் 19ஆம் தேதி மாமல்லபுரம் அருகே பட்டிபுலத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் செயற்கை கோள்களை ஏவும் திட்டம் 2023இன் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான செலவை மார்ட்டின் அறக்கட்டளை ஏற்பதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனர் டாக்டர் ஆனந்த் மகாலிங்கம் கூறினார். செயற்கைகோள் தயாரிக்க இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களில் 80 விழுக்காட்டினர் அரசுப்பள்ளி மாணவர்கள் என்று அவர் கூறி னார். மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை அதிகரிப்பதற்காக இத்தகைய முயற்சி உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்த செயற்கைகோள்கள் 5 முதல் 6 கிலோ மீட்டர் உயர்த்தில் ஏவப்படும் என்றும் அவை காற்றின் தரம், காஸ்மிக் கதிர்களின் தாக்கம், காற்றின் வேகம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார். வருங்காலத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட  டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஏபிஜெ எம்ஜெ. ஷேக் சலீம் மற்றும் ஏபிஜெஎம்ஜெ ஷேக் தாவூத் ஆகியோர் கூறினர். இந்த முன்மாதிரி திட்டத்தில் இந்தியா முழுவதும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5,000 மாண வர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் சுமார் 150 சிறிய ரக (1 கிலோ எடைக்கும் குறை வான) செயற்கைகோள்களை வடி வமைத்து உருவாக்க உள்ளனர். பின்னர் இந்த செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மற்றும் கணிதவியலை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாக இந்த திட்டத்திற்கான செலவை ஏற்கும் மார்ட்டின் குழும நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எம். ஜார்ஜ் மார்ஷெல் கூறினார்.