districts

img

வேலூர் 4வது மண்டலத்தில் சுகாதார சீர்கேடு

வேலூர். அக் 16 - வேலூர் மாநகராட்சி 4 வது மண்ட லத்துக்கு உட்பட்ட அனைத்து வார்டு களிலும் சுகாதார சீர்கேடுளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொரப்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தும், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி நிறைவு  செய்தும் பேசினர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் செ.ஏகலைவன் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். வட்டார தலைவர்கள் டி.முரளி, ஆர்.செல்வம் கே.சார்லஸ் வி.ஷோபா ஆர். bஜய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கு ரூ. 1300 கோடி ஒதுக்கியும் சாலைகளை சீரமைக்காமல் உள்ளதால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் தண்ணீர் ஆறு போல் தேங்கி நிற்கிறது. சில தெருக்களில் வீடுகளில் கழிவுநீர் புகுந்து பரவுவதை தடுத்து நிறுத்தவேண்டும். மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்கள் உள்ளதால் குப்பைகள் முழுவதும் அகற்றாமல் குவிந்துள்ளதால் நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்த்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.