districts

img

பள்ளி கட்டிட மேற்கூரை விழுந்து விபத்து மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி பயில நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை,நவ.23- திருவண்ணாமலை மாவட்டம், தண்ட ராம்பட்டு தாலுகா தென்முடியனூர் கிராமத் தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 124 மாணவர்கள் கல்வி பயின்று  வருகின்றனர்.  1999-2000 ஆண்டில் கட்டப்பட்ட கட்டி டத்தில்,  5 ஆம் வகுப்பு மாணவர்கள் அமரும் வகுப்பறையே,  தலைமை ஆசிரியர் அறை யாக உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக இருந்ததால்,  வகுப்பறையின் சுவர் ஓரமாக மாணவர்கள் அமர்ந்துள்ளனர். இந்நிலையில், வகுப்பறையின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள் ளது. 2021-2022 கல்வியாண்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறியாளர் மூலம் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், இடிக்க உத்தரவு வந்துள்ளது ஆனால் கட்டிடத்தை இடிக்காமல், வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மூலம் பழுது பார்க்கப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 3 கட்டிடங்கள் இதுபோன்ற ஆபத்தான நிலை யில் உள்ளது.  உடனடியாக மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு  மாணவர் பாதுகாப்பையும், எதிர்கால கல்வி யையும் உத்தரவாத படுத்த வேண்டும் என, வாலிபர், மாணவர் சங்கம் சார்பில் வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் வி.கோபிநாத், சிபிஎம் வட்டாரச் செயலாளர் சக்திவேல், தொழிற்சங்கத் தலை வர்.ஆர்.ரவி கிளை நிர்வாகிகள் சி.குபேந்தி ரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் க.சத்தியசீலன், கே.பிரகாஷ், பி.சட்ட முத்து  உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்து, மாவட்ட கல்வி  அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள் ளனர்.