districts

சென்னை முக்கிய செய்திகள்

பழவேற்காட்டில் அரை கி.மீட்டருக்கு  மணலால் மூடப்பட்ட சாலை

திருவள்ளூர்,மே 10- பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் கடல் நீர் கரையை  தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது. இந்த நிலையில் அலை சீற்றம் காரண மாக பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும் புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி பகுதியில் கடல் நீர் கரையை தாண்டி அருகில் உள்ள பழவேற்காடு - காட்டுப்பள்ளி  சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த சாலை முழுவதும் மணலால் மூடப்பட்டது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மணலால் மூடி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கும், வடசென்னை அனல் மின்நிலையத்திற்கும் செல்லும் முக்கிய சாலை ஆகும். சாலை முழுவதும் மணல் மூடி கிடப்பதால் ஊழியர்கள் பொன்னேரி- மீஞ்சூர் வழியாக சுமார் 30 கி.மீ சுற்றி சென்று வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த மிக்  ஜாம் புயலின் போது கடல் அரிப்பு ஏற்பட்டு  பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது. அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி  செய்யப்பட்டது. ஆனால் தற்போது வழக்க மான கடல் சீற்றத்தில் சாலை வரை கடல் நீர்  வந்து சாலை முழுவதும் மணலாகி உள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் கடல் சீற்றத் தால் பாதிக்காத அளவில் தடுப்பணை மற்றும்  உயர்மட்ட பாலம் கட்டி போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்  கொலை  செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

சென்னை, மே 10- சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப் பட்ட வழக்கில், சிறுவன் உள்பட 3 பேர் கைது  செய்யப்பட்டனர். திருவான்மியூர் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ச.பொன்னி (58).  இவர் அங்கு தனது உறவினர் ஐயப்பன் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலை யில் ஐயப்பன் வியாழக்கிழமை வேலைக்கு  சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  இது குறித்து திருவான்மியூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் பொன்னி வீட்டின்  அருகே வசிக்கும் ஒரு சிறுவனும், அவரது  கூட்டாளிகளான பெசன்ட்நகர் திடீர் நகரைச் சேர்ந்த ர.விக்னேஷ் (20), அதே பகுதியைச் சேர்ந்த மு.தீனா (21) ஆகிய 3 பேரும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், 3 பேரையும் வெள்ளியன்று கைது செய்தனர். விசார ணையில், கைது செய்யப்பட்ட சிறுவன், தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில்  தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு ஊதாரித்தனமாக இருந்ததும், மேலும் ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து  வந்து தனிமையில் அந்த சிறுவன் அடிக்கடி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த பொன்னி, அந்த சிறுவனை கண்டித்துள்ளார். மேலும் அந்த சிறுவன் குறித்து அவரது பெற்றோரிடம் பொன்னி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தனது கூட்டாளிகளுடன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பொன்னியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது  தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத குடிநீர் இணைப்பை  துண்டிக்க உத்தரவு

காஞ்சிபுரம், மே 10 - காஞ்சிபுரம் மாவட்டம், மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சட்டவிரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக் கைகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள  முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகள்  மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்ப டும் மின் மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துண்டித்து பறிமுதல் செய்யப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தினசரி  குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தும் பொருட்டு வீடுகள், திருமண மண்டபங்கள்  கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் இணைப்பு கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதனை  துண்டிப்பு செய்து அபராதம் விதிக்கப்படும். கோடைகாலங்களில் வறட்சியினை தவிர்க்கும் பொருட்டு குடிநீர் வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று  கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு  ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

அம்பத்தூர், மே 10-  பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு  மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். பூந்தமல்லியில் பார்வைக் குறைபாடுடை யோருக்கான மாற்றுத்திறனாளிகள் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பார்வை குறைபாடுடைய 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1ஆம் வகுப்பு  முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்ற னர். இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் இருபாலருக்கும் தனித்தனியாக உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.  இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இப்பள்ளி யில் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் எழுதி யிருந்தனர். தேர்வு முடிவில் 15 மாணவர்க ளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து பார்வையற்றோர் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. திருநாவுக்கரசு என்ற  மாணவர் 500க்கு 405 மதிப்பெண் பெற்று  பள்ளியிலேயே முதலிடத்தை பெற்றுள் ளார். தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர் களையும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும்  ஆசிரியர்கள் பாராட்டினர்.

 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  அடிப்படை வசதிகளை ஏற்படுத்துக!  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை 

விழுப்புரம், மே 10- செஞ்சி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடிப்படை வசதி களை ஏற்படுத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்  மூட்டைகள் புதனன்று திடீரென பெய்த கன மழையால் நனைந்து சேத மடைந்துள்ளது. செஞ்சி சுற்றுவட்டார  பகுதிகளில் விவசாயம் பெருமளவில் நடை பெறுகிறது. இதனால் தமிழ்நாட்டிலேயே அதிகமான நெல் கொள்முதல் செஞ்சி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செய்யப்படுகிறது. ஓரளவு விலை கிடைக்கும் என்ற  நம்பிக்கையில் விவசாயிகள் அதிகப்படி யான வேளாண் பொருட்களை இங்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போது மான இடவசதி இல்லாததால் கூடுதலாக நெல் மூட்டைகள் வரும் போது திறந்த வெளி யில் வைக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே வேளாண் பொருட்களை வைப்பதற்கு தேவையான இடவசதியை ஏற்படுத்த வேண்டும் என சங்கத்தின் சார்பில்  பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எப்போது மழை பெய்தாலும் வேளாண் பொருட்கள் நனைந்து வீணா வது தொடர்கதையாக உள்ளது, எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செஞ்சி வேளாண்மை  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை வேறு இடத்தில் மாற்றம் செய்து போதுமான  அளவிற்கு கட்டுமானத்தை உருவாக்கி வேளாண் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை  எடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக  வேளாண் பொருட்களை பாதுகாக்க கொட்டகை அமைக்கவும், கூடுதலாக தார் பாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காவல் நிலைய விசாரணைக்கு  சென்ற மூதாட்டி  மயங்கி விழுந்து பலி

திருவண்ணாமலை,மே.10-  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர்  பகுதியை சேர்ந்தவர் கம்சலா (75) இவர் இறையூர்  கிராமத்தில் தனது விவசாய நிலத்தில்  தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்  கம்சலா என்பவரிடம் நிலத்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கம்சலா தன்னை பக்கத்து நில உரிமையாளர் தாக்கியதாக பாச்சல் காவல் நிலையத்தில் கடந்த மே5 அன்று புகார் மனு அளித்துள்ளார். பாச்சல் காவல்துறையினர் மே 9ஆம் தேதி விசாரணைக்காக இரு தரப்பினரையும் அழைத்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்காக 75 வயதான கம்சலாவிடம் போலீசார்  மற்றும் எதிர்தரப்பினர்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,  மூதாட்டி கம்சலா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அதில்  இருந்த மருத்துவர் கம்சலாவை பரிசோதனை செய்தனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்த னர். இறந்த கம்சலா உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

10ஆம் வகுப்பு தேர்வு கடலூர் மாவட்டம் கடந்த ஆண்டுகளை விட முன்னேற்றம்

 கடலூர்,மே.10- 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியானது. இதில் கடலூர்  மாவட்டத்தில் 92.63 விழுக் காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 33 வது இடத்தில் இருந்த கடலூர் மாவட்டம் தற்போது 19-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் கடந்த  மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8வரை நடைபெற்றது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளி களில் பயின்ற 16,908 மாண வர்கள்,15,661  மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். இதில் 15,230 மாணவர் கள், 14, 939 மாணவிகள் என  30,169 மாணவர்கள் தேர்ச்சி  பெற்றனர். இதில் மாண வர்கள் 90.08 விழுக்காடும், மாணவிகள் 95.39 விழுக்காடும் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 92.63 தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 88.49 தேர்ச்சி விழுக்காடு பெற்ற நிலையில், இந்த ஆண்டு 92.63 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழக அளவில் கடந்த ஆண்டு 33 வது  இடத்தில் இருந்த நிலையில் தற்போது கடலூர் மாவட்டம் 19 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு தேர்வில்  புதுச்சேரியில் 89.14 விழுக்காடு தேர்ச்சி

 புதுச்சேரி,மே.10- 10ம் வகுப்பு பொதுதேர்வில் புதுச் சேரி மாநிலத்தில் 89.14 விழுக்காடு  மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளி களின் தேர்ச்சி விகிதம் 0.84 தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல்  8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்காலில்10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவு களை பள்ளி கல்வித்துறை சார்பில் வெள்ளியன்று (ஏப்-10) வெளியிட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மார்ச், ஏப்ரலில் நடைபெற்ற 10ம்  வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள  289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்  7,590, மாணவி கள் 7,362 என மொத்தம் 14,952 பேர் தேர்வு  எழுதினர்.   தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் - 6,527, மாணவிகள் 6,801  என மொத்தம் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விழுக்காடு 89.14 விழுக்காடாகு. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் சொற்ப எண்ணிக்கையில் 0.02  விழுக்காடு அதிகரித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 85.99 விழுக்காடும், மாணவிகள் 92.38 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்தாண்டும் மாண வர்களை காட்டிலும் மாணவிகள் 6.39 விழுக்காடு பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளில்  6,789 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 181 தனியார் பள்ளி களில் ஆண்கள் - 4,666, பெண்கள் - 4,263 என மொத்தம் 8,929 பேர் தேர்வு  எழுதினர். இதில் ஆண்கள் - 4,441, பெண்கள் - 4,181 என 8,625 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். மேலும், புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 81.69 விழுக்காடு  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை விட 0.14 விழுக்காடு குறைவாகும். இதேபோல், காரைக்காலில் உள்ள அரசு பள்ளி கள் 65.31 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை காட்டிலும் 2.75 விழுக்காடு குறைவு ஆகும். மொத்தமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 78.08 விழுக்காடு ஆகும். கடந்தாண்டு அரசு பள்ளிகள் 78.92 விழுக்காடு தேர்ச்சி பெற்றன. இதனை ஒப்பிடுகையில் இந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி  விகிதம் 0.84 விழுக்காடு குறைந் துள்ளது. அதே சமயம், 181 தனியார் பள்ளி களின் தேர்ச்சி விகிதம் 96.60 விழுக்காடு  ஆகும். கடந்தாண்டு 95.61 விழுக்காடு தேர்ச்சிதான் பெற்றிருந்தன. இதை ஒப்பிடுகையில், இந்தாண்டு தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 0.99 விழுக்காடு அதிகரித்துள்ளது. 100 விழுக்காடு தேர்ச்சி  பெற்ற அரசு பள்ளிகள் கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளி, வாதானூர் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளி, கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, சுத்துகேணி அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லியனூர் பிள்ளையார் குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்தைபுதுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, வரிசிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி என புதுவையில் 7 அரசு பள்ளிகள், காரைக் காலில் ஒரு அரசு பள்ளி என மொத்தம் 8 அரசு பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், சமூக  நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி  வரும் பிள்ளைச்சாவடி ஆனந்தரங்கப் பிள்ளை சிறப்பு பள்ளி மற்றும் புதுவை யில் உள்ள 82 தனியார் பள்ளிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளி கள் உட்பட மொத்தம் 107 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு கல்வித்துறை  சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: 10ஆம் வகுப்பு தேர்வில் 86.83% தேர்ச்சி

கள்ளக்குறிச்சி,மே.10 - கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 2024-இல் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சேர்ந்து மொத்தமுள்ள 214 பள்ளிகளில் 20,126 மாணவ  மாணவிகள் தேர்வு எழுதிய தில் 17,476 மாணவ-மாணவி கள் தேர்ச்சி அடைந்துள்ள னர். கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 86.83விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர். மாண வர்கள் 10,375 பேர் தேர்வு எழுதியதில்  8597 பேர் தேர்ச்சி பெற்றனர்.  தேர்ச்சி சதவீதம் 82.86 ஆகும். மாணவிகள் 9791 தேர்வு எழுதியதில் 8876 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 91.06 விழுக்காடாகும். மாநிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 34-வது இடத் தில் உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித் துள்ளார்.