சென்னை,மார்ச் 30- சாம்சங்க் நிறுவனம் 5 புதிய ஸ்மார்ட் போன்களை சென்னை யில் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி ஏ13, ஏ23, ஏ33 5ஜி, ஏ53 5ஜி, ஏ73 5ஜி ஆகியவையே அந்த புதிய வகைகள். அழகான வடிவமைப்பை கொணடுள்ள இந்த சாதனங்கள் புதிய வண்ணங்களில் கிடைக்கின்றன. கேலக்ஸி ஏ சீரிஸ் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் முழுமையான வசதிகளை அனைவருக்கும் ஏற்ற விலையில், அதி நவீன தொழில்நுட்பத்து டன் வழங்குவதை இந்த ஸ்மார்ட்போன்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது. ரூ. 14,999 முதல் ரூ.35999 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 108 எம்பி கேமரா, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டபிலைசேஷன் (ஓஐஎஸ்), மேம்பட்ட ஆயுள், தண்ணீர் மற்றும் தூசு எதிர்ப்புக்கான ஐபி67 தர மதிப்பீடு, ஆற்றல்மிகு ஸ்நாப்டிராகன் 778ஜி 5ஜி புராசஸர் மற்றும் சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, 120 ஹெச்இசட் ரெஃப்ரெஷ் விகிதம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது இந்த புதிய வகை ஸ்மார்ட்போன்கள் என்று சாம்சங்க் சந்தையிடல் பிரிவு தலைவர் மஹேஷ் ஆலந்தட் கூறினார்.