மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி, 127வது வட்டக்கிளைகள் சார்பில் சனிக்கிழமையன்று பாரதியார் நகரில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை பிலால் முஸ்தபாவும், அருமைநாதனும் அடுப்பை பற்ற வைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பகுதிக்குழு உறுப்பினர்கள் ம. நீலமேகம், கிளைச் செயலாளர்கள் இரா. முருகன், அ. சுப்ரமணியன், ப. திருஞானம் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.