புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் விநாயகம் பட்டு கிராமத்தில் தமிழர் திருநாளாம் தைத் பொங்கல் திருநாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான தவில் விநாயகம் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.