districts

img

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல்

காட்பாடி,ஜன.12- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜன. 12 அன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்  குமார், ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜ் ஆகியோர் பங்கேற்று 1500 மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர். இந்த நிகழ்வின் போது பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக  உறுப்பினர்கள் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர்  செ.நா.ஜனார்த்தனன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்  விமலா, துணைத் தலைவர் கௌதமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.மாரிமுத்து, கே.திருமொழி, பி.ரோசலின் பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் தூய்மை படுத்தப்பட்டு, பள்ளி மாணவிகள் அனைவரும் இணைந்து வண்ண கோலமிட்டு செங்கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டனர்.