தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சைதாப்பேட்டை கிளை சார்பில் புதனன்று (பிப்.14) அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே ‘காதலர் தின கொண்டாட்டம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. கவிதை, கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில், காதல் மணம் புரிந்த தம்பதியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கிளைச் செயலாளர் முசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மா.மதிவதனி பேசினார். தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன், மாவட்டச் செயலாளர் அசோக் சிங், கிளை நிர்வாகிகள் ரா.சாய் சுரேஷ், டான்பாஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.