திருவண்ணாமலை. ஜன. 21- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் காட்டுமலையனூர் கிராமத்தில் பன்னியாண்டி இன மக்கள் 4 தலைமுறையாக வசிக்கின்றனர். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பன்னியாண்டி எஸ்.சி என்று சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்கள் மேற்படிப்பு படிக்கவும், அரசு சலுகைகளை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்று வழங்கக் கோரி பல ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தியும், மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாதிச்சான்று வழங்கக் கோரி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.