சென்னை, ஜூன் 8- இலங்கையைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு “எஸ்” வடிவில் இருந்த முது கெலும்பை அறுவை சிகிச்சை செய்து நேராக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த சி சிறுமி முது கெலும்பின் (பக்கவாட்டு வளைவு) முறையற்ற வளர்ச்சியால் மிகவும் சிரமப்பட்டு வந்தாள். சிறுமிக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவளது பெற்றோருக்கு திருப்தி இல்லாததால் அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க விரும்பவில்லை. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு வந்தனர். சிக்கலான அறுவை சிகிச்சை என்ப தால் நீண்ட காலமாக அவ ளுக்கு அதற்கான சிகிச்சை செய்யாமல் புறக் கணித்தன் காரணமாக சிறுமியின் முதுகெலும்பில் குறைபாடு மேலும் கடுமை யாகியிருந்து. இதையடுத்து மூத்த மருத்துவ ஆலோச கரும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவருமான பார்த்த சாரதி சீனிவாசன் தலை மையிலான மருத்துவர்கள் குழு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து எஸ். வடிவ முதுகெலும்பை நேராக்கியது. தற்போது அந்த சிறுமி தலை நிமிர்ந்து நடக்கிறாள். இது குறித்து டாக்டர் பார்த்தசாரதி சீனி வாசன் கூறுகையில், சிறுமி சான்வியின் முது குத்தண்டில் 140 டிகிரி வளைவு “எஸ்” போல் இருந்தது. சிறுமியின் எடை 30 கிலோவுக்கு குறைவாகவும், மேலும் மொத்த ரத்த அளவு 2.5 லிட்டராக இருந்ததால் ரத்த இழப்புக்கான வாய்ப்பும், சிறுமிக்கு மூளை, முதுகுத் தண்டு மற்றும் நரம்புகளில் கட்டிகள் உருவாகும் நிலை யும் இருந்தது. இதன் காரண மாக சிறுமிக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சி னைகளுக்கு இடையே எங்கள் மருத்துவர் குழு சிறப்பாக சிகிச்சை அளித்தது. தற்போது அந்த சிறுமி முதுகுத்தண்டு நிமிர்த்தப்பட்டதால் உயர மாகத் தெரிவதோடு நன்றாக நடக்கவும் முடி கிறது என்றார்.