districts

img

வன்முறையை தூண்டி மக்களை திசைதிருப்பும் பாஜக

சென்னை, மார்ச் 26- தேர்தல் நேரத்தில் வன்முறையை தூண்டி மக்களை திசை திருப்ப பாஜக,  அதிமுக முயற்சி செய்கிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். வடசென்னை மக்களவைத் தேர்த லில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டி யிடுகிறார். இதையொட்டி சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் எம்.ஆர்.நகரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் திட்டமிட்டு கல வரத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற நிலையை உருவாக்கி மக்களை திசை திருப்ப பாஜக, அதிமுக முயற்சி செய்கி றது. போதை மாநிலமாக குஜராத் உள்ளது. பல கோடி ரூபாய் போதைப் பொருட்கள் அதானி துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அது குறித்தெல்லாம் பாஜகவினர் பேச மறுக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து இங்கு கடத்தி வரப்படும் போதை பொருட்களை தின சரி காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். எனவே எந்த வன்முறைக்கும் இட மளிக்காமல் மக்களிடம் சென்று அரசு செய்துள்ள நலத்திட்டங்கள், கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பணி களை எடுத்துக்கூறி பாஜகவை வீழ்த்து வது ஒன்றே குறிக்கோள் என்ற அடிப் படையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், காங்கிரஸ் மாவட்ட தலை வர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச்  செயலாளர் கு.வேம்புலி வெங்க டேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விசிக மாவட்டச் செயலாளர் நா.உஷாராணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் பி.சம்சுதின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எம்.மொய்தீன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் திமுக தலைமை செயற் குழு உறுப்பினர் இரா.கருணாநிதி, மாநில பொறியாளர் அணி செய லாளர் இரா.நரேந்திரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே. சண்முகம், பகுதிச் செயலாளர் அ.விஜ யகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.