districts

img

ரூ.7 லட்சம் நிவாரணம், பறிமுதல் டிராக்டர் ஒப்படைப்பு சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி!

விழுப்புரம், மார்ச்.9- விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வட்டத்திற்குட்பட்ட தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனியார் நிறுவன கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக களத்தில் இறங்கிய சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் முயற்சியால் உரிய நியாயத்தை பெற்று தந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வட்டம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த  லட்சுமணன் மகன் சின்னதுரை என்கிற விவசாயி ஸ்ரீராம் தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கியிருந்தார். கொரோனா காலத்தில் வருமானமின்றி தவித்ததால் தவணை கட்ட முடியாமல் வட்டி மட்டும் கட்டுவதாக கூறியுள்ளார். அதை ஏற்க  அந்த நிறுவனம், குண்டர் கள் மூலம் டிராக்டரை பறிமுதல் செய்து கொண்டது. இதனால் மன முடைந்த விவசாயி சின்னதுரை தற்கொலை செய்து கொண்டார். செய்வது அறியாமல் கண்ணீருடன் திகைத்து நின்ற அந்த குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் ஆறுதல் கூறினர். பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயின் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம், பறிமுதல் செய்த டிராக்டரை திருப்பிக் கொடுக்க வேண்டும், கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து, அரசு அதி காரிகள், தனியார் நிறுவன நிர்வாகி களுடன் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை.  இதனைத் தொடர்ந்து, திண்டிவனம் சாராட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடை பெற்றது. இதில், என்.சுப்பிரமணியன், ஆர்டி.முருகன், மேல்மலையனூர் வட்டச் செயலாளர் டி.முருகன், வாலிபர் சங்க நிர்வாகி ஹரிஹரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த பேச்சுவார்த்தையின் முடி வில், பறிமுதல் செய்த டிராக்டரை அந்த குடும்பத்திடம் தனியார் நிறு வனம் ஒப்படைத்தது. மேலும், தற்கொலை செய்து கொண்ட விவ சாயி பெற்ற கடன் மற்றும் வட்டித் தொகை முழுமையாக தள்ளுபடி செய்து கடன் இல்லா சான்றும் 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.