சென்னை, ஜன.2 - சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கு நிதிஒதுக்கி அரசா ணை வெளியிட ப்பட்டுள்ளது சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிக ரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கைலாஷ் சந்திப்பி லிருந்து மயிலாப்பூர் அடையாறுக்கு வாகனங்கள் செல்கின்றன. மறுபுறம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி தக வல் தொழில்நுட்ப அதிவி ரைவுச் சாலைக்கும் இந்த சந்திப்பிலிருந்தே வாக னங்கள் செல்கின்றன. இதனால் மத்திய கைலாஷ் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, இந்திரா நகர் சிக்னல் மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய இடங்களில் யு வடிவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையில் மேம்பா லம் கட்டப்பட உள்ளது. ராஜிவ் காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கி நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அரசாணையில், மேம்பாலம் கட்டுமான பணிக்கு 31.44 கோடி ரூபாயும், மழைநீர் வடிகால்வாய், நடை பாதை அமைக்க 5 கோடி ரூபாயும், வழிகாட்டி பலகை அமைக்க 40லட்சம் ரூபாயும், தடுப்புச் சுவர் அமைக்க 35 லட்சம் ரூபா யும், மேம்பாலத்தில் விளக்கு கள் அமைக்க 50 லட்சம் ரூபாயும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க 5 லட்சம் ரூபாயும், மரங்கள் வைக்க 3 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்ள்ளது. இந்தப்பாலம் 2,100 அடி நீளம், 25 அடி அகலத்தில் கட்டப்படும். இந்தப்பணியை விரைந்து தொடங்க ஒப்பந்தம் கோரப்பட்டு விரை வில் கட்டுமான பணிகளை தொடங்க உள்ளனர்.