சென்னை, மார்ச் 20- சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கி யுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப்பணிகள் ரூ. 63,246 கோடி யல் 119 கி.மீ. தூரத்திற்கு 3வது தடங்களில் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணி மனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது”என்றார்.
கூவம், அடையாறு நதிகள் சீரமைக்கப்படும்
சிங்காரச் சென்னையை உரு வாக்கும் முயற்சியின் ஒரு பகுதி யாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப் படுத்தி, மறு சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த முயற்சி களின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடை பாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடை யாறு ஆற்றங்கரையை அலங்க ரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன்ரூ. 1500 கோடியில் செயல்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.
வட சென்னையை மேம்படுத்த ரூ.1000 கோடி
நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்க ளால் வெளியிடப்பட்ட வாழ உகந்த நகரங்கள் பட்டியலில் முன் வரிசை யில் உள்ளது. இருப்பினும், நக ரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது. சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற திட்டத்தை ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நட வடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியை யும் நடைமுறையிலுள்ள திட்டங் களையும் ஒருங்கிணைத்து செயல் படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
4 வழி மேம்பாலம்
முதலமைச்சரின் சாலை மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1,407 கோடியில் 148 கி.மீ., சாலைகளை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கி.மீ., சாலைகளை ரூ. 803 கோடியில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் ரூ. 621 கோடியில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்க ளின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனை யாக அமையும். இப்பணிகள் நிறை வுற்றவுடன், பல முக்கிய சந்திப்பு களில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும். பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்கு வரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, ரூ. 996 கோடியில் 215 தரைப்பாலங்களுக்கு பதி லாக உயர்மட்டப் பாலங்கள் கட்டு வதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன. சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக ரூ. 1,847 கோடியும், சென்னை-கன்னியா குமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு ரூ. 1,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.