ஆவடி, மே 15- சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்த பால் வியாபாரியை ஆவடி காவல்துறை ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி னார். திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் தன சேகர் (வயது 20). பால் வியாபாரம் செய்து வரு கிறார். இவர் வெள்ளியன்று நள்ளிரவு தனது நண்பர் சூரியகுமாருடன் திருமுல் லைவாயல் சரஸ்வதி நகர் 10-வது தெருவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை எடுத்து பிரித்து பார்த்த போது அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனசேகரன் மற்றும் சூரிய குமார் அந்த பணத்தை திரு முல்லைவாயல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த உதவி ஆய்வாளர் நேருவிடம் ஒப் படைத்தனர். காவல்துறையி னர் இது குறித்து விசாரணை நடத்தி பணத்தை உரிய வரிடம் ஒப்படைந்தனர். இதையறிந்த ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இருவரையும் நேரில் வரவழைத்து பரிசு மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.