சென்னை, ஜன. 25- கொலை, ஆள்கடத்தல் உள் ளிட்ட 24 வழக்குகளில் தொடர் புடைய பிரபல ரவுடி படப்பை குணா இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரு ம்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள் ளத்துரை தலைமையில் காவல் துறையினர் படப்பை குணாவை தேடி வருகின்றனர். ரவுடி குணா மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள் கடத்தல் என 24 வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார். காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங் களில் கட்டப் பஞ்சாயத்து, அடிதடி யில் ஈடுபட்டதாகவும் குணா மீது புகார் உள்ளது. இந்த நிலையில் ரவுடி படப்பை குணா செவ்வா யன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். முன்னதாக, குணாவை என் கவுண்ட்டர் செய்யும் திட்டம் இல்லை என்று காவல்துறையினர் தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக் கப்பட்டிருந்தது. மேலும், குணா சரணடைந்தால் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.