சென்னை, அக். 10 - சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்டக்குழு உதயமானது. சங்கத்தின் மாவட்ட அமைப்பு மாநாடு ஞாயி றன்று (அக்.9) சிந்தாதரிப் பேட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் எஸ்.கே.முருகேஷ் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க திருவல்லிக் கேணி பகுதித் தலைவர் ஜி.துரைராஜ் சிஐடியு கொடியை ஏற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அ.லோ.மனோகரன் வரவேற்றார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.சந்திரன் மாநாட்டை தொடங்கி வைத் தார். மாவட்ட துணைச் ச்செயலாளர் எம்.உதய குமார் அமைப்பு அறிக் கையை முன்மொழிந்தார். மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன், சென்னை பெரு நகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் நிறை வுரையாற்றினார். எம்.முரளி நன்றி கூறினார். சங்கத்தின் கவுரவ தலை வராக எம்.சந்திரன், தலை வராக எஸ்.கே.முருகேஷ், பொதுச் செயலாளராக ம.உதயக்குமார், பொருளா ளராக எம்.முரளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.