சென்னை, மார்ச் 8- தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன தொழிலாளர் சங்கத்தின் 16ஆம் ஆண்டு விழா சூரப்பட்டில் வெள்ளியன்று (மார்ச் 8) நடைபெற்றது. விழாவில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றி வைத்தார். சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்பு சாமி பெயர் பலகையை திறந்து வைத்தார். துணைப் பொதுச்செய லாளர் ஏ.ராயப்பன், வழக்கறிஞர் வீ.ஆனந்தன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் லூர்துசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல தலை வர் ரவிக்குமார், வி.கமல நாதன் (சிபிஎம்), பா.சிதம்ப ரம், டி.ஜெ.கிருஷ்ணமூர்த்தி, வி.சரவணன், இளங்கோ வன் (சிஐடியு) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்ன தாக பகுதி தலைவர் கோ.வாசுதேவன் வரவேற் றார். கிளைத் தலைவர் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.