districts

img

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு பாஜகவுக்கு எதிராக எழுச்சி ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட மாவட்டங்களில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடலூர் ஜவான் பவன் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவனும், சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாவும் கண்டன உரையாற்றினர். இதேபோல், விருத்தாசலத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அஞ்செட்டி தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகிலும்,  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2 மையங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முத்துக்கடை, ஆற்காடு, கலவை பேருந்து நிலையங்களில் அருகே போராட்டங்கள் நடைபெற்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவெண்ணெய்நல்லூர் கடை வீதி, வளத்தி கடை வீதிகளிலும் ஆர்ப்பட்டம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, பெரணமல்லூர் சடத்தாங்கல் கூட்டுச் சாலை, செங்கத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டக்குழு,ஒன்றியச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

;