சென்னை, ஏப்.6- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதியகிளை சோழிங்கநல்லூர் பகுதி, பள்ளிகரணையில் உதயமானது. கிளை அமைப்புக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட், பள்ளிக்கரணை பொறுப்பாளர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கிளை தலைவராக ருக்மணி, செயலாளராக லாவண்யா, பொருளாளராக வெனிஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மயிலாப்பூர் பகுதி கரிமேட்டில் நடைபெற்ற கிளை அமைப்புக் கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட், மயிலை பகுதி பொருளாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவராக பி.சாந்தி, செயலாளராக வி.சந்தியா, பொருளாளராக கன்னியம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.